சித்திரா பவுர்ணமி.

மே 1, 2015 at 9:36 முப 12 பின்னூட்டங்கள்

சித்திர குப்தன்

சித்திர குப்தன்

நன்றி—-படம். கூகல்

இவ்வருஷத்திய சித்ரா பவுர்ணமி பூஜை  3—5—-2015 அன்று வருகிறது.

சித்திரைமாத, பவுர்ணமி,,சித்திரை நக்ஷத்திரமும் சேர்ந்து வரும்தினத்தைச்,சித்திராபவுர்ணமி என்று  கொண்டாடி பூஜிக்கிறோம்.ஏறக்குறைய  நக்ஷத்திரமும்,பவுர்ணமியும் சேர்ந்து வரும்.அன்று சித்திர குப்தனுக்கு பூஜை செய்து வழிபடும் வழக்கமிருந்தது.இதற்காக ஒரு கதையும் வழக்கத்தில் சொல்லுவார்கள்.

ஒருஸமயம் பார்வதிதேவி அழகான சித்திரமொன்றை வரைந்தார். அதற்கு  சிவபெருமான் உயிர் வழங்கினார். சித்திரம் உயிர்பெற்றதால் சித்ரகுப்தனென்ற பெயர் வழங்கலாயிற்று.

யமதர்மராஜனுக்கு வேலை பளுஅதிகமாகிறதுயார்என்னபாவபுண்ணியங்கள்செய்தார்களென்று

பார்த்து அவர்களுக்கானதைச்செய்வதில் கடினம் ஏற்படுகிறது என்று

விஷ்ணுவிடமும்,சிவனிடமும் சொல்கிரார் யமன். உயிர்களைப் படைக்கும் பிரம்மதேவனிடம் சொல் என்கிரார்கள் அவர்கள். யமதர்மருக்கு,

அப்படி பிரம்ம தேவனால் கணக்குப்பிள்ளையாக  சித்ரகுப்தன் நியமிக்கப்படுகிறார்.உலகத்தில் எல்லோருடைய பாப புண்ணிய கணக்குகளைத் துல்லியமாக வைப்பவர் சித்ர குப்தன்.

அவரை பூஜைசெய்து வணங்குவதுதான்  சித்ரா பௌர்ணமியின் விசேஷம். தாங்கள் செய்த பாவங்ளைக் குறைத்தும்,புண்ணியங்களை அதிகரிக்க வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கமே.  புண்ணியமான காரியங்கள் அதிகம் செய்ய வேண்டுமென்பதை இந்த நாள் ஞாபகப்படுத்துகிறது. அதிலும் வயதான பெண்மணிகள்   கட்டாயம் இதைச் செய்வார்கள்.

உப்பில்லாமல் சாப்பிடுவது இதன் விசேஷம். நிவேதனத்திற்கு உப்பு சேர்த்து ருசியாகச் செய்து நிவேதித்து   தானமும் செய்வார்கள். இந்த நன்னாளில் தானம் செய்வது விசேஷம்.

கோடைகாலமாதலால்   விசிறி,குடை,பாதரக்ஷை,  பழங்கள் என தானம் கொடுப்பார்கள்.

எங்கள் ஊரில்   ஐந்து ஆறு பெண்களாகச் சேர்ந்து இதனைச் செய்வார்கள். சித்திரகுப்தன் கதை ஏதோ பாட்டின் வடிவத்தில் இருக்கும். புத்தகம் பார்த்து பாடுவார்கள். மற்றவர்கள் பக்தியுடன் பாட்டைக் கேட்பார்கள். மிக்க சுலபமான நடையில், ஒரே ராகமாகத்தான் பாடிக் கேட்டிருக்கிறேன்.

ஒரே ஒரு அடி ஞாபகம் உள்ளது. சித்திர புத்திரனார், சீரார் பெரும் கணக்கர், நாட்டுக்கொரு கணக்கர் நல்ல கணக்கர் வந்தாரம்மா இப்படியே கதை பூராவும் பாடுவார்கள். பாட்டைக் கேட்பதற்கு அக்கம்,பக்கமுள்ள பெண்கள் எல்லோரும் வந்து பக்தியுடன் பாடலைக் கேட்பார்கள். பூஜையின் கடைசியில் பிரஸாத விநியோகமும் உண்டு. முக்கியமாக  அன்று உப்பில்லாமல் சாப்பிடுவார்கள்.

சர்க்கரைப் பொங்கல்,மெயினாகப் பண்ணுவார்கள். மாங்காய் விசேஷமாக இருக்கும். அன்றைய தினம் தானங்கள் செய்தால் விசேஷமென்பர். கலந்தசாதங்கள்வடை முதலானதும் செய்து வந்தவர்களுக்குக்  தானமாகக் கொடுப்பார்கள்.

போடும் இழைகோலத்தில்  தெற்குபுறம்  வாயிற்படி மாதிரி திறந்து விட்டுக் கோலம் அமைந்திருக்கும். நடுவில் சித்திர குப்தனாக கற்பனை செய்துஒரு படம். வைதீகர்கள் வீட்டில் ஓலைச்சுவடிகள் இருக்கும்.  அதனுடன் எழுதுகோலும் பூஜையில் வைத்து பூஜிப்பார்கள். கிருஷ்ணாஷ்டமிக்குப் போடுவதுபோல  வாயிலிலிருந்து பாதமும் போடுவார்கள். இப்பொழுது பார்க்கவே கிடைக்காது. நிறைய பேர் வந்து பூஜையைப்பார்த்துப் போவார்கள். உப்பில்லாமலும் சாப்பிடுவார்கள்.

சென்றமாதம் காஞ்சீபுரம் போய் சித்ர குப்தன் கோவிலுக்குப் போய் வந்தோம்.  மிகவும் அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது கோவில். அதன் ஞாபகமாக இந்தப்பதிவு.

Entry filed under: பூஜைகள். Tags: , .

தர்பூசணி ஜூஸ். அன்னையர் தினப்பதிவு—-28

12 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  9:59 முப இல் மே 1, 2015

    அருமையான பகிர்வு. நன்றி.

    மறுமொழி
    • 2. chollukireen  |  8:37 முப இல் மே 2, 2015

      பின்னூட்டத்திற்கு,அருமை என்று சொன்னதற்கும் மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 3. ranjani135  |  11:56 முப இல் மே 1, 2015

    சித்ரா பவுர்ணமி என்றால் அழகர் ஆத்துல இறங்குவார் என்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது. சித்திரகுப்தன் பூஜை பற்றி இன்னிக்கு தெரிஞ்சுண்டேன். அந்தப் பாட்டை முழுசா யாராவது போட்டா நன்றாக இருக்கும்.

    மறுமொழி
    • 4. chollukireen  |  8:43 முப இல் மே 2, 2015

      எனக்கும் இரண்டு தலைமுறைக்கு முந்திய பாட்டு.யார் சொல்லுவார்கள்? உப்பில்லால் சாப்பிடுவோம் என்பதை என்றும் மறந்ததில்லை. பார்க்கலாம். ரஞ்ஜனி கேட்டிருப்பதற்கு பதில் சொன்னால் நன்றியை நாநே சொல்லிவிடுவேன். அன்புடன்

      மறுமொழி
      • 5. chollukireen  |  8:44 முப இல் மே 2, 2015

        உப்பில்லா ம ல் விட்டுப்போச்சு.

  • 6. chitrasundar5  |  7:37 பிப இல் மே 1, 2015

    காமாக்ஷிம,

    சித்ரகுப்தன் கதையை இன்றுதான் கேட்கிறேன். சித்ரா பௌர்ணமியில் செய்ய வேண்டிய விசேஷங்களும் புதிதுதான். எல்லாமும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 7. chollukireen  |  8:49 முப இல் மே 2, 2015

      ஆமாம் நான் மிகவும் பழங்காலத்தில் பார்த்த பூஜையை இன்றும் நினைவு கொள்கிறேன். பூஜைகளும்,செய்பவர்களும் இருக்கலாம். கிராமத்தில் பார்ததது போல இருக்குமா? அன்புடன்

      மறுமொழி
  • 8. திண்டுக்கல் தனபாலன்  |  1:11 முப இல் மே 2, 2015

    சித்ரகுப்தன் பற்றிய சிறப்பு தகவல்களுக்கு நன்றி அம்மா…

    மறுமொழி
  • 9. chollukireen  |  8:50 முப இல் மே 2, 2015

    மிக்கவே நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 10. marubadiyumpookkum  |  12:08 பிப இல் மே 5, 2015

    யமராஜனின் உதவியாக தர்மகணக்கு பதவியோடு
    ஏடு எடுத்து எழுதிடும் சித்திர குப்தரே
    ஏழைக்கருள்வய் இச்சகத்துள்ளே…

    இது எமது அன்றாட பிரார்த்தனையின் போது
    யாம் எம் மகனுடன் பாடும் பாடல்..யாமே யாத்தது…

    மறுமொழி
    • 11. chollukireen  |  8:53 முப இல் மே 6, 2015

      கவிதையாளரே உம்முடைய யாமே யாத்தது பாடல் மிக்க நன்றாக இருந்தது. அன்றாடப் பிரார்த்தனை. யாவரும் மனனம் செய்து சொல்லலாம். நன்றி உங்கள் பாடலுக்கும்,பதிலுக்கும். அன்புடன்

      மறுமொழி
      • 12. marubadiyumpookkum  |  9:13 முப இல் மே 6, 2015

        thanksma..keep contact.vanakkam

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


மே 2015
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 551,522 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.